மக்களோடு எந்த தொடரும் இல்லாமல் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால் எந்த கட்சிக்கும் செல்ல தயார். நடிகர் சந்தானத்தின் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…என்ன நடந்தது இதோ..!!
பிரபல தொலைகாட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பின் சிறந்த காமெடி நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து தற்போது நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன், காமெடியனாக நடிக்க மாட்டேன் என நடித்துக் கொண்டிருப்பவர் காமெடி நடிகர் சந்தானம்.
இயக்குனர், தயாரிப்பாளர், என சினிமாவில் தன்னை நிரூபித்துக் கொண்டிருப்பவர். இளைஞர் யுவதிகளுக்கு சந்தானத்தை பிடித்தாலும் பெரியவர்களுக்கு அவரை பிடிப்பதில்லை, காரணம் சந்தானத்தின் வார்த்தை பிரயோகங்கள் தான்.
டபுள் மீனிங் வார்த்தைகளை அதிகம் பேசுவதால் குடும்பத்தினருடன் இருந்து சில நேரங்களில் சந்தானத்தின் திரைப்படங்களை பார்க்க முடிவதில்லை, ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய சந்தானம் அண்மையில் அரசியல் ரீதியான சர்ச்சையில் சிக்கினார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் எந்த கட்சிக்கும் தாம் செல்ல தயாராக இருப்பதாக மீடியாக்களின் முன் கூறினார்.
அரசியல் பற்றி எந்த அறிவும் இல்லாத, மக்களுக்கு சேவை எதுவும் செய்யாத சந்தானம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பது கேவலமான செயல் என்றும் இது போல் பதவி வெறி கொண்டவர்களை அரசியலுக்கு வரகூடாது என்றும் திட்டி தீர்க்கப் பட்டது. இந்த நிலையில் இது சந்தானம் இன்னொரு அரசியல் வாதியை கிண்டல் செய்வதற்கு கூறினார் என்றும் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் சந்தானம் தரப்பு கூறியுள்ளது.!!