தாலி கட்ட சில மணி நேரங்கள் மாத்திரமே இருந்த நிலையில் துடிதுடித்து இறந்த 24 வயது இளைஞன்..!!
திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் மணமகன் இறந்த சம்பவம் ஒன்று ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத் மலக்பேட் பகுதியில் வசித்து வந்தவர் சந்தீப். இவர் ஹைதராபாத் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சாப்வேர் எஞ்சினியராக பணி புரிந்து வந்துள்ளார்.
சந்தீப்பின் அம்மா சந்தீப் சிறுவயது இருக்கும் போது இறந்துவிட அப்பா மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். அண்மையில் தாத்தாவும் இறந்துவிட சந்தீப் தனிமையில் இருப்பதால் உறவினர் கூடி உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு சந்தீப்பும் சம்மதித்துள்ள நிலையில் முதல் நாள் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வரை கொண்டாட்டங்கள் இடம்பெற்ற பின் அனைவரும் உறங்க சென்றுள்ளனர். அதிகாலை முகூர்த்தம் இருந்த நிலையில் சந்தீப்பின் அறை கதவை உறவினர்கள் தட்டியுள்ளனர்.
ஆனால் சந்தீப் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிரியில் தூக்கிட்டு சந்தீப் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏன் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று யாருக்கும் தெரியாத நிலையில் 24 வயது இளைஞனின் இந்த முடிவு அனைவரையு. சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்பது உறுதியாகி உள்ளது..!