2 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொலை செய்த தாய் தந்தை.! இந்தியாவில் நடந்த கொடூர சம்பவம்.!!
2 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினரை பொலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் கனகபுரா பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் மானசா என்ற பெண்ணுக்கும் 3வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த போது அதன் குறைகள் தெரியாத நிலையில் வளர ஆரம்பித்ததும் குழந்தையின் உடலில் குறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவத்தினால் குணப்படுத்த முடியும் என முயன்ற போதும் குணமாகவில்லை, இதனால் மருத்துவ செலவு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப் படுத்த நினைத்த குடும்பத்தில் மூத்த பாட்டிகள் இருவர் குழந்தையை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளதுடன் குடும்பத்தினருடன் பேச அனைவரும் சம்மதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் குழந்தையை அருகில் இருந்த பழைய கிணற்றில் தூக்கி போட்டுள்ளனர். குழந்தை இறந்து போகும் வரை கிணற்றருகில் நின்று விட்டு வீட்டிற்க்கு வந்தி விட்டனர். குழந்தையின் அழுகுரல் கேட்காததாலும், இவர்கள் கிணற்றை பார்த்துக் கொண்டு நின்றதாலும் சந்தேகப் பட்ட அயலவர்கள் பொலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் கிணற்றை பார்த்த போது குழந்தையின் உடல் மிதந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன நிலையில் உடனடியாக குழந்தையின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதுடன், சங்கர், மானசா, மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்துள்ளனர்.!!