20 வயது பெண் மற்றும் அவரது 6 மாத குழந்தையை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்.! வெளியான அதிர வைக்கும் காரணம்.!!
இலங்கையில் வவுனியா முருகனூர் பகுதியில் இளம் பெண் ஒருவரையும் அவரது 6 மாத குழந்தையையும் கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 6 வருடங்களின் பின் குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்களின் மகள் காணாமல் போனதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெற்றோர் கிளிநொச்சி மனித உரிமைகள் அலுவலகத்திற்கு தெரிவித்திருந்தனர்.
குறித்த பெண் தொடர்பாக பொலீஸிலும் புகார் கொடுத்த நிலையில் பொலீஸாரும் குறித்த பெண்ணை தேடிவந்தனர். பெண் காணாமல் போன விடயம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரிடம் விசாரணை நடத்தப் பட்ட போதும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை,பொலீஸாரிடம் குறித்த நபர் பொய்யான தகவல்களை கூறி தப்பித்துள்ளார். குறித்த பெண் காணாமல் போனதாக பொலீஸார் விசாரணை நடத்தி வந்த போது குறித்த இளைஞர் இரண்டு முறை வெளி நாட்டு பணிக்குச் சென்று நாடு திரும்பியுள்ளார்.
காணாமல் போன பெண் தொடர்பான சந்தேகம் குறித்த நபரை சுற்றியே இருந்ததால் பொலீஸார் விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில் காணாமல் போன பெண் பயன்படுத்திய பெண் பயன்படுத்திய தொலைபேசி தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளது, இதனை வைத்து பொலீஸார் நடத்திய விசாரணையில் தொலைபேசியை சந்தேக நபர் விற்றது தெரிய வந்தததை தொடர்ந்து மீண்டும் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர். இதன் போது சந்தேக நபர் மாறி மாறிபேசி மாட்டிக் கொண்டதுடன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வவுனியாவை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன் கைது செய்யப் பட்டு நடத்தப் பட்ட விசாரணையில் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு சென்றிருந்த போது அயல் வீட்டில் வசித்த சஜின்திகா என்ற யுவதியுடன் காதல் ஏற்பட்டுள்ளது, காதல் காமத்தில் முடிய குறித்த பெண் கர்ப்பமாகி உள்ளார். பின்னர் குறித்த பெண் வீட்டில் இருந்து காணாமல் போய் உள்ளார். இந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்து முருகனூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும் திருமணமாகாத நிலையில் அடிக்கடி திருமணம் செய்துகொள்ளும் படி கேட்டுள்ளார் குறித்த யுவதி. இதனால் கடுப்பான குறித்த நபர் கழுத்தை நெரித்து சஜின்திகாவை கொலை செய்துள்ளார். பின்னர் 6 மாதமே ஆன தனது குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
முருகனூர் பகுதியில் தூரத்தில் வீடுகள் இருப்பதாலும் இவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகளில் யாரும் இல்லாததாலும் தோட்டத்தில் குழி தோண்டிய குறித்த நபர் காதலி மற்றும் குழந்தையை குழியில் போட்டதுடன் சீனி மற்றும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். குழியில் சடலங்கள் எரிந்ததுடன் மூடி அதன் மீது செடிகள் நாட்டியுள்ளார். பொதுவாக தோட்டம் செய்யும் பகுதி என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை, கைது செய்யப் பட்ட நபர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலீஸாரின் விசாரணையில் நபர் சொன்னவை அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது.!!