நான்கு வருடங்களாக 2 சகோதர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட இளம் பெண்..! அதிர வைத்த வீடியோக்கள்..!!
தங்கை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சகோதர்கள் பற்றிய செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த சசிகலா, இவர் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த நிலையில் லாக் டவுன் கரணமாக வீட்டில் இருந்து பணி புரிந்து வந்துள்ளார். கடந்த வாரம் திடீரென சசிகலா தற்கொலை செய்துகொண்டார்.
இவரது உடல் அடக்கம் செய்யப் பட்ட நிலையில் சசிகலாவின் உடன் பிறந்த சகோதரரான அருண்பாபு சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் , சசிகலாவின் தற்கொலைக்கு காரணம் தனது சகோதர்கள் எனவும் தெரிவித்ததுடன் சடலத்தை தோண்டி விசாரணை செய்ய வேண்டும் என கூறி மயானத்தில் இருந்து போராட்டம் நடத்தினார்.
இதனால் சசிகலாவின் சடலம் தோன்றி எடுக்கப் பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டது. இதன் போது தனது பெரியப்பாவின் மகனான தேவேந்திரன், மற்றும் புருஷோத்தமன் தனது தங்கையின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று புகாரில் அருண்பாபு குறிப்பிட்டிருந்ததால் புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் பற்றி பொலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.
தி.மு.கவின் இளைஞர் அணி உறுப்பினர்களான இவர்கள் சசிகலாவை தொல்லை செய்தது தெரிய வந்தது, இதில் புருசோத்தமன் தலைமறைவானதை தொடர்ந்து, தேவேந்திரன் சரணடைந்துள்ளார். இது பற்றி தேவேந்திரன் கூறுகையில் எனக்கு சிறு வயதில் இருந்தே சசிகலாவை பிடிக்கும்,தங்கை என்பதால் கட்டி தர மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும். அதனால் அவளை அனுபவிக்க நினைத்தேன், இதற்கு சகோதரனும் ஆதரவு தந்தான்.
சசிகலா குளிப்பதை வீடியோ எடுத்தோம், பின் எங்களோடு படுக்கையை பகிரும் படி மிரட்டினோம். கடந்த நான்கு வருடங்களில் சசிகலாவிற்கு வந்த அத்தனை திருமண பேச்சையும் வீடியோவை காட்டினோம். இதனால் சசிகலா கண்ணீர் விட்டு கெஞ்சினார். சம்பவ தினத்தன்று அழைத்த போது முடியாது கன்னத்தில் அடித்துவிட்டு வந்துவிட்டேன், என தெரிவித்துள்ளார். 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் அனுபவித்து அவர் அனுபவித்த வலிகளை இவர்களுக்கு நடக்க வேண்டும் என்பதே மக்களின் ஆசை..!!