பிச்சைகாரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த பிரபல நடிகை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? புகைப்படத்தை பாருங்களேன்..!
குறைந்த பட்ஜெட்டில் உருவாகினாலும் வசூல் மழையில் நனைந்த திரைப்படம் “பிச்சைக் காரன்” 2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி சட்னா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள்.சட்னா பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு முன் குரு சுக்ரன் என்ற படத்தில் தான் தமிழுக்கு அறிமுகமானார்.
ஆனால் பிச்சைக்காரன் திரைப்படத்தில் மகிழினி கதாபாத்திரம் தான் அதிகம் பேசப் பட்டது. திரைப்பட வெற்றியை தொடர்ந்து எய்தவன் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தார். திட்டம் போட்டு திருடுர கூட்டம் திரைப்படத்திலும் நடித்தார் அதன் பின் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின் பின் குடும்பத்தினரின் ஏகப்பட்ட எதிர்பினால் காவல்துறையில் புகார் கொடுத்தார்கள். அதன் பின் இரு வீட்டாரும் மனம் மாறி இவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் சட்னாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
திரைப்பட வாய்ப்புகளும் இல்லாத நிலையில் இருக்கும் சட்னா தனது குழந்தையின் பிறந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
மீண்டும் நடிப்பீர்களா என சட்னாவிடம் கேட்டபோது நிச்சயம் நல்ல திரைப்படம் கிடைத்தால் நடிப்பேன் என் கணவர் திரைப்பட வினியோகஸ்த்தர், அவருக்கு சினிமா பற்றி என்பதால் நடிப்பதற்கு தடை விதிக்கவில்லை என கூறியுள்ளார்..!