செய்தியாளர்களிடம் சீமான் கூறிய அதிரடி முடிவு, அலறும் மற்ற கட்சி தலைவர்கள்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களா? நீட்டின் முக்கிய நோக்கமே தமிழக மக்கள் மருத்துவர் ஆகக் கூடாது என்பது தான். ஏற்கனவே கட்சி பொதுக்கூட்டத்தில் ”என் அப்பத்தா போய் ஒரு மாத்திரைக் கேக்கும் அவன் அப்பத்தா பேசுர மொழி புரியாமல் வியாதி புரியாமல் எதையோ எழுதிக் கொடுத்து கொன்றுவிடுவான்” என்று நீட் தேர்வை எதிர்த்தும் ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழத்தில் வேலை செய்வதை பற்றியும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்த்தித்த சீமான் உள்ளாட்சியில் தனித்து நிற்க போவதாக அறிவுத்துள்ளார். 2009 லோக்சபா தேர்தலில் அதிமுக வை ஆதரித்து முதல் முறை கட்சியில் நின்றார் அதன் பின் இப்பொழுது வரை தனித்து தான் போட்டி இடுகிறார். டெபாசிட் கூட எடுக்காமல் ஒவ்வொரு முறையும் தோல்வி உற்ற பொழுதும் தற்போது நாம் தமிழர் கட்சி பெரிய அளவில் வாக்குகள் பெற்றிருப்பது அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. சீமான் கமலுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் இப்பொழுதும் கூட எங்களுக்கு ஓட்டு முக்கியம் இல்லை. நாங்கள் என்றுமே தனித்து தான் போட்டி இடுவோம் என கூறியுள்ளார்.