சீமானுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்துறை பிரதிநிதி லதன் வெளியிட்ட வீடியோ..! அதிரும் வீடியோ இதோ அதிகம் பகிருங்கள் தமிழர்களே..!!
கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார்கள் குவிந்தபடி இருகிறது. இதற்கான காரணம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை குறித்து சீமான் பேசிய சர்ச்சை பேச்சு தான். சிறையில் 7 தமிழர்கள் விடுதலை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்ததாகவும் அதனை தான் கர்வத்துடன் சொல்வதாகவும் சீமான் கூறி இருந்தது இந்தியா மட்டும் இன்றி விடுதலை புலிகள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு ராஜீவ் காந்தி கொலையில் சம்மந்தம் இல்லையென தமிழீழ சட்டத்துறைப் பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும் அரசியற்துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து லதன் சுந்தரலிங்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமானுக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்கு உள்ள கட்டமைப்பை கெடுக்கும் செயல்களை சீமான் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
விடுதலை புலிகளின் பெயரை சொல்லி அரசியல் செய்யும் சீமானின் கேவலமான செயற்பாட்டை சீமான் நிறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். லதன் சுந்தரலிங்கம் புலிகள் மீது தடைவிதித்திருந்த போது தமிழீழ விடுதலை புலிகளுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வாதாடி ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையை நீக்கியவர் என்பது குறிப்பிட தக்கது..!!