காலை மாலை இரண்டு நேரம் சீரகத் தண்ணீர் குடித்தால் நடக்கும் மேஜிக் என்ன தெரியுமா.!? இத படித்து பாருங்கள்…!!
சில நோய்களுக்கு மருந்து எம் கையில் இருக்கும் நாம் கண்டு கொள்வதில்லை. எம் முன்னோர்கள் காலத்தில் ஆங்கில மருத்துவங்கள் இருக்கவில்லை, ஆனால் எந்த கொடூர நோய்களும் அவர்களை தாக்கவில்லை எப்படி? அது மட்டும் இன்றி அவர்களது ஆயுளும் கெட்டியாக இருந்தது 100வயதை தாண்டியும் வாழ்ந்தார்கள்,
இன்று வயது எல்லையே கிடையாது எந்த வயதில் வேண்டுமானாலும் நோய்கள் தாக்குவதோடு மரணத்தையும் பரிசளிக்கிறது. இதற்கு காரணம் இன்றைய உணவு முறைகள், சூழல் மாசடைதல் போன்றவை தான். அன்று இலைகள்,விதைகளே மூலிகைகள் என பயன்படுத்தப் பட்ட மருத்துவங்களாகும்.
அப்படி எம் முன்னோர் வழி வந்த பாட்டிமார் சொல்லிய மிக முக்கிய மருத்துவத்தில் ஒன்று தான் “சீரக தண்ணீர்”வெறும் இரண்டு கரண்டி சீரகம் மற்றும் தண்ணீர் ஒரு கப் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் என்ன நடக்கும்.? என்ன என்ன நோய் குணமாகும் ? வாங்க பார்க்கலாம். தினமும் காலையில் சீரக தண்ணீர் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் நிற்பதோடு தலை சுற்றல், வாந்தி போன்றவையும் ஏற்படாது.
தீராத சளி, ஆஸ்த்துமா, முட்டு போன்றவை தீர காலை மாலை இரண்டு வேளை சீரக தண்ணீரை குடியுங்கள். இது குடிக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பயன்படுத்தலாம் எந்த தீங்கும் ஏற்படாது. இருமல் காச்சலால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கவும் சீரகத் தண்ணீர் குடியுங்கள்.
காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் ஒரு கப் குடித்துவிட்டு 30 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் உடல் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். தொப்பையும் முற்றிலும் நீங்கிவிடும். இந்த நீரை 5 வயது நிரம்பிய குழந்தைகள் முதல் குடிக்கலாம்..!