54 பள்ளி மாணவிகளின் உயிரை பறித்த இலங்கை அரசின் விமான தாக்குதல்!! மக்கள் கண்ணீர் அஞ்சலி..!!
கடந்த 14 வருடங்களுக்கு முன் சிங்கள் இராணுவத்தினரின் விமான தாக்குதலில் மரணமடைந்த 54 மாணவிகள் மற்றும் 7 பணியாளர்களின் நினைவு நாள் இன்றாகும். 2006ம் ஆண்டு முல்லைத்தீவு செஞ்சோலையில் மாணவிகள் மீது விமான தாக்குதல் நடத்தப் பட்டது,
இந்த தாக்குதலில் 54 மாணவிகள் கொடூரமாக கொல்லப் பட்டனர். அத்துடன் 150திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் இறந்து இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்ற நிலையில் இன்றைய தினம் வள்ளிபுனம் இடைக்காட்டு சந்தியருகில் அமைந்துள்ள நினைவு வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது,
அரசு நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்திருந்த போதும், பொலீஸாரின் கெடுபிடிகளை தாண்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
குறிப்பாக முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் பொலீஸாருடன் முரண்பட்டதுடன் அஞ்சலியும் செலுத்தினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி இருந்ததுக குறிப்பிட தக்கது..!!