பெற்றோரின் செயலால் தற்கொலை செய்துகொண்ட 23 வயது யுவதி..! யாருக்கும் தெரியாமல் பெற்றோர் செய்த செயல்..!!
தமிழகத்தில் இறந்த மகளின் சடலத்தை மறைக்க பார்த்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் செந்தாமரை. 23 வயதான செந்தாமரைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது.
திருமணம் முடித்து கணவர் வீட்டுக்கு சென்ற செந்தாமரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் தாய்வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறந்த மகளின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் பெற்றோர் வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைக்க முயற்சி செய்த நிலையில் பொலீஸாருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் செந்தாமரையின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
பொலீஸாரின் விசாரணையில் செந்தாமரை வேறு நபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் லாக் டவுண் காலத்தில் பெற்றோர் செந்தாமரையின் மனதை மாற்றி அவர்கள் பேசிய நபருக்கு செந்தாமரையை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்து போய் இருந்த செந்தாமரையை வீட்டில் இருந்து வெளியே செல்ல தடை விதித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன செந்தாமரை வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விடயம் வெளியே தெரிந்தால் அவமானம் என நினைத்து சடலத்தை அடக்க முயன்றுள்ளனர். தற்போது பெற்றோர் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால் பொலீஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்..!!