ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள எங்கேயும் எப்போதும் ஹீரோ சர்வா..!
பிரபல தெலுங்கு நடிகரும் காதல்னா சும்மா இல்ல திரைப்லடத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவருமான நடிகர் சர்வானந்த் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர்..
எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ரசித்ததன் மூலம் தமிழிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்தும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் சர்வானந்த் தமிழில் சூப்பர் ஹிட்டான தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்பட சூட்டிங்கில் இருந்த இவர் ஸ்கை டைவிங் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்தால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தோள் மூட்டு, கால், போன்ற இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாதங்களுக்கு சர்வானந்த் கட்டில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர்..!