ரஜினிகாந்தின் அறிவிப்பால் ஜோதிட தொழிலை விட்டு விலகுகிறாரா ஜோதிடர் ஷெல்வி.? ஏன் எதற்காக இதோ முழு விபரம்.!!
ஜோதிடர் ஷெல்வி, இனி ஜோதிடத் தொழிலை கைவிட்டுவிட்டு என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2020ம் ஆண்டு உலகில் வாழும் அத்தனை மக்களுக்கும் நல்ல காலம் என்றும், மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்கள் என்றும் ஜோதிடர் ஷெல்வி கடந்த வருடம் கணித்து கூறி இருந்தார்.
அவரது கணிப்பை பொய்யாக்கி 2020ம் ஆண்டு ஒட்டுமொத்த மக்களையும் ஆட்டம் காட்டியது. இன்னும் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவர் சொல்வது பொய் என்றாலும் ஏதாவது கூறிக்கொண்டே இருப்பார்.
இந்த வருடம் டிசம்பர் மாதம் ரஜினி அரசியலுக்கு வந்து விடுவார் என்று ஜோதிடர் ஷெல்வி மீடியாக்களுக்கு தெரிவித்தார், அது ஏதேச்சையாக நடந்தது. டிசம்பர் 31ம் திகதி அரசியல் பற்றிய அறிவிப்பு வரும் என ரஜினி அறிவித்தார். இம்முறை மக்களும் உறுதியாக ரஜினிகாந்த் அவர்களை நம்பினார்கள்.
இதனை நம்பிய ஜோதிடர் ஷெல்வியும் டிசம்பர் 31ம் திகதிக்கு முதல் ரஜினி அரசியலில் கால் வைக்காவிட்டால் ஜோதிட தொழிலை கைவிடுவதாக அறிவித்தார். நேற்றைய தினம் ரஜினிகாந்த் அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பலரும் பொய் ஜோதிடர் ஷெல்வி ஜோதிட தொழிலை விட்டு விலகி விட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஜோதிடர் அமைதியாக இருக்கிறார்.!!