ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த ஆபாச இணைய தளங்கள்.! பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் கணவர் அதிரடி கைது.!!
ஹிந்தி, தமிழ் என நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப் பட்டவர் ஷில்பா செட்டி, இவர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ராஜ் குந்த்ராவை பொலீஸார் அதிரடியாக கைது செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பொலீஸார் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் சில ஆபாச இணைய தளங்கள் தடை செய்யப் பட்டது, அதே போல் ஆபாச விளையாட்டுகளும் தடைசெய்யப்பட்டது.
ஆனால் அதற்கு அதிகமாக ஆபாச இணைய தளங்கள் வந்ததுடன் இதனால் பலர் பாதிக்கப் பட்டனர். பாதிக்கப் பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது இதில் அனைத்து ஆபாச தளங்களும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுடையது என்பது தெரியவந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இதன் மூலம் ராஜ் குந்த்ரா கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது.!