பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரே நாளில் வெளியேறப் போகும் இரண்டு போட்டியாளர்கள்.! ஷாக்கில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களின் ரசிகர்கள் யாருக்கு ஆதரவு தருவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இன்று நல்லவராக இருப்பவர் அடுத்த நாளே கெட்டவராகி விடுகிறார். இதில் குறித்த தொலைகாட்சி ஒரு சில போட்டியாளர்களுக்கு உதவுகிறது.
குறிப்பாக ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, கேப்ரியலா, ஆரி, சனம் ஆகியோர் எது செய்தாலும் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. ஒரு சில நேரங்களில் unseen காட்சிகளில் வரும் போட்டியாளர்கள் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். அதனை குறித்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் காட்டுவதில்லை.
அதே போல் பாலாஜி, அனிதா ஆகியோர் சிறிய விடயம் செய்தாலும் பெரிதாக்கி கமல்ஹாசன் வரை கொண்டு வந்து விடுவார்கள். இது இப்படி இருக்கையில் இந்த வாரம் போட்டியாளர்கள் யாரும் வெளியேற்றப் படவில்லை. இதற்கும் சேர்த்து அடுத்த வாரம் போட்டியாளர்கள் இரண்டு பேர் வெளியேற்றப் படுவார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
இந்த முறை ஆஜித் தலைவராக இருப்பதால் ஆஜித்தை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அனிதா, பாலா, ஷிவானி, சுசி, கேப்ரியலா, ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் வர வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால் பாலா காப்பாற்றப் படுவார். சுசி வெளியேற்றப் படுவார். அதே நேரம் இரண்டை எவிக்ஷன் என்றால் இம்முறை ஷிவானி அல்லது கேப்ரியலா வெளியேற்றப் படுவார். தற்போது கிடைத்த தகவலின் படி இரண்டு எவிக்ஷன் இருக்கிறதாம்.!