பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷிவானி போட்ட பதிவு.! மறுபடி முதல் இருந்தா என சினக்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் சீசன் 4 நிறைவடைந்தாலும் இன்னும் அது பற்றிய பேச்சு குறையவில்லை. டைட்டில் வெற்றிபெற்ற ஆரி மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நிலையில் ஒரு சில போட்டியாளர்கள் வேலைகளில் பிஸியாகி விட்டார்கள். அதே போல் பிக் பாஸ் வீட்டின் மிக்ஸர் கேர்ள் என கொண்டாடப் பட்ட ஷிவானியும் தனது வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் 96 நாட்கள் இருந்த ஷிவானி அவராகவே இருந்தார். யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத ஷிவானி எப்படி வீட்டிற்குள் சென்றாரோ அப்படியே வெளியே வந்தார். ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுக்கு போகாத இவர் சில நாட்கள் காதலில் விழுந்து இருந்தார்.
ப்றீஸ் டாஸ்கில் ஷிவானியின் தாயார் வீட்டிற்குள் சென்று லெப்டு ரைட்டு வாங்கிவிட்டு வந்ததால் இறுதி டாஸ்கை சிறப்பாக செய்தார். இதனால் பிக் பாஸ் வீட்டின் சிங்கப் பெண் ஆனார். வெளியே வந்த பின் அனைத்தையும் பார்த்த ஷிவானி வீட்டிற்குள் மீண்டும் சென்ற போது பாலாஜியுடன் சண்டையிட்டார்.
இதெல்லாம் சமாதானமான நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்ட்டாகிராம் பக்கம் சென்றுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தபின் முதல் முதல் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ளார்.!!