திடீரென மாறிய வாக்குகள்..! குழப்பத்தில் ரசிகர்கள் வெளியேற்றப் படுவது யார் இதோ..!!
பிக் பாஸ் சீசன் 4 ஆரம்பித்து 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்றளவும் போட்டியாளர்கள் சாதித்தது என்று ஏதும் இல்லை, போட்டியாளர்களாக ரசிகர்களுக்கு தெரிந்த இருவர் என்றால் ஒருவர் ஆரி, மற்றவர் பாலாஜி தான். சனம் ஷெட்டி அடிக்கடி தேவை இல்லாத விடயங்களில் மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக் கொள்வார், அனிதா பேசியே கொள்வார் தவிர மற்றைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றார்களா என்பது கேள்விகுறியாகவே உள்ளது,
அது மட்டும் இன்றி கடந்த சீசன்களை விட இந்த சீசனே ரசிகர்களால் வெறுக்கப் படும் சீசனாக உள்ளது, அதனாலோ என்னவோ ரசிகர்களின் வாக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து போட்டியாளர்களை தொலைகாட்சி வெளியேற்றி வந்தது. ஆனால் இந்த வாரம் யார் வெளியேற்றப் படுவார் என்பதில் சில குழப்பங்கள் இருந்து வருகின்றது. ஆரியை தவிர அனைவரின் வாக்குகளும் மாறிக் கொண்டிருக்கின்றது,
ஆரி அதிக அளவான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார், அடுத்த இடங்களில் நிஷா ஷிவானி இருக்கும் நிலையில் ரம்யா பாண்டியன், ஆஜித்,அனிதா, சனம்ஷெட்டி ஆகியோரின் வாக்குகள் கூடி குறைந்துகொண்டிருக்கின்றது. வெள்ளி நள்ளிரவு 12 மணியுடன் வாக்களிக்க முடியாது,
சனிக்கிழமை கண்டிப்பாக யார் வெளியே செல்கின்றனர் என்பது உறுதியாகி விடும். இந்த முறை இதிலும் குழப்பங்கள் இருக்கலாம், ரகசிய அறை வைக்கும் நாட்கள் இது என்பதால் ரகசிய அறையில் ஒருவரும் ஒருவர் வெளியேற்றப் படலாம் என்றும் கூறப்படுகின்றது. பிக் பாஸ் வீட்டில் கண்டெண்ட் தருவதால் சனம் ஷெட்டி வெளியே செல்ல வாய்ப்புகள் இல்லை,
அனிதா மற்றும் ஆஜித் இடையே போட்டி உள்ளது, ஆஜித் வெளியேற்றப் பட்டால் அனிதா ரகசிய அறைக்கு செல்லலாம் என கூறபடுகின்றது. இது இப்படி இருக்க ஒரு சிலர் ஷிவானி வெளியேற்றப் படலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம் இன்று யார் வெளியேற்றப் படுகின்றனர் என்று..!!