பிக் பாஸ் வீட்டில் டிஆர்பிக்காக பயன்படுத்தப் படும் ஷிவானி.! ஏமாற்றப் படுகிறாரா.? வெளியான தகவல்..!!
பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் ஆரம்பித்துள்ளது, வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் ரம்யா பாண்டியன், சனம்ஷெட்டி, கேப்ரியலா, ஷிவானி என நால்வர் திருமணமாகாதவர்கள் உள்ள நிலையில் பாலாஜி,ஆஜீத், சோம் சேகர் என மூன்று இளைஞர்கள் இருக்கின்றார்கள்.
கடந்த சீசன்களில் முதல் வாரத்திலேயே காதல் ஆரம்பித்து சில அத்துமீறும் செயல்களும் இடம் பெறும், ஆனால் இந்த சீசனில் 25 நாட்கள் கடந்துவிட்ட பின்பும் இன்னும் காதல் பெரிதாக இல்லை. ஆனால் ஏற்கனவே கேப்ரியலா பாலா இடையே காதல் இருப்பது போல் காட்டினார்கள், ஆனால் பாலாஜியோ கேப்ரியலாவை தங்கை என கூறிவிட்டார். இதனால் ஏதும் செய்ய முடியவில்லை.
அதனை தொடர்ந்து சனத்துடன் பாலாவை கோர்த்துவிட பிக் பாஸ் டீம் முயற்சி செய்தது, ஆனால் சனம் ஷெட்டிக்கும் பாலாவிற்கும் வயது வித்தியாசம் அதனால் முடியவில்லை. சோம் சேகர் ஆக்டிவ் இல்லாததால் அவரை கோர்த்துவிட முடியவில்லை. தற்போது ஷிவானியின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளது விஜய் டிவி. கடந்த சில நாட்களாக பாலாஜியை ஷிவானியையும் சேர்த்து பாடல் போட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் ஷிவானிக்கு பாலாஜிக்கு மேல் எந்த ஈர்ப்பும் இல்லை, பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே ஷிவானியின் தாய் கண்டிப்பாக தொலைகாட்சி நிச்சயம் உன்னை காதல் வலையில் சிக்க வைக்கும் அதனால் பாதுகாப்பாக இரு என் கூறினாராம். அத்துடன் ஷிவானியின் நெருங்கிய தோழியும் அதையே கூறி அனுப்பியதால் ஷிவானி சற்று விழிப்புடன் செயற்படுகின்றார்.
19 வயதான ஷிவானி இன்னும் யாரையும் காதலிக்கவில்லை, வீட்டிற்குள் காதல் மலர்ந்தால் அது முதல் காதலாக இருக்கும், தொலைகாட்சி தனது சுய நலத்திற்காக அப்பாவி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாமல் இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்..!!