மாணவிகளை குளிக்க வைத்து சாமியார் அறைக்கு அனுப்பும் சிஷ்யை.! ஆசிரியைகளால் பாலியல் தொல்லை அனுபவித்த மாணவிகள்.!!
தமிழகத்தில் கடந்த சில நட்களாக கைதுகள் அதிகரித்து வருகின்றது. இதில் அதிகமாக இருப்பது பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுக்கும் புகார்கள். பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்களின் பாலியல் வன்கொடுமை வெளியாகி நடவடிக்கை எடுக்கப் பட்ட நிலையில் தற்போது பல பள்ளி மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொலீஸில் புகார் அளித்து வருகின்றனர். சுஷில் ஹரி பள்ளியின் சிவங்கர் பாபா மீதும் பல பள்ளி மாணவிகள் புகார் கொடுத்தனர். மாணவிகளை கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது, மர்ம உறுப்புகளை தொடுவது என அவர் மீது பல புகார்கள் ஆரம்பத்தில் இருந்தது.
அதன் பின் சில மாணவிகளை மூளைச் சலவை செய்து தகாத உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பாதிக்கப் பட்ட மாணவிகள் ஆதரங்களுடன் புகார் அளித்தனர். ஆனால் சிவசங்கர் பாபாவிற்கு மாணவிகளை குறித்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா அத்துடன் வார்டன் நீருஜா ஆகியோரே செய்து வந்தது தெரியவந்த நிலையில் பொலீஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
சிவசங்கர் பாபாவின் கண்ணில் படும் மாணவியை அடைய நினைத்தால் முதலில் சுஷ்மிதாவிடமே கூறுவார். சுஷ்மிதா சிவசங்கரின் பள்ளியில் படித்து வெளியேறியவர். படிப்பு செலவு மட்டும் இன்றி சுஷ்மிதாவின் திருமண செலவையும் சிவசங்கர் பாபாவே செய்ய அவரது முக்கிய சிஷ்சையானார் சுஷ்மிதா. பாபா பார்வை பட்ட மாணவியை முதலில் சுஷ்மிதா தான் மூளைச் சலவை செய்வது, பின் மற்றைய ஆசிரியர்கள் ஆமாம் சாமி போடுவார்கள்.
வார்டன் நீருஜாவிற்கு பாபாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் குறித்த மாணவியை குளிக்க வைத்து அழகாக ஆடை அணிந்து பாபாவின் அறைக்கு அனுப்பி வைப்பார் நிரூஜா. முடியாது என மறுக்கும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதும் நடந்துள்ளது. பொலீஸ் விசாரணையில் குறித்த ஆசிரியைகள் இவற்றை ஒத்துக்கொண்ட நிலையில் பொலீஸ் விசாரணையின் பின் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.!