” எதிர் காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது ” தந்தை மகள் கொலை குற்றவாளி எஸ்ஐ பாலகிருஷ்ணன் வாக்கு மூலம்..! சம்பவ தினத்தில் நடந்தது இது தானாம்..!!
என் எதிர்காலம் மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலத்தை பற்றி பயமாக இருக்கிறது என சாத்தான்குளம் காவல் நிலைய எஸ் ஐ பாலகிருஷ்ணன் சிபிசிஐடியிடம் தெரிவித்துள்ளார். சாத்தான் குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் மரணமடைந்த விடயம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
தந்தை மகனை கைது செய்து அழைத்துச் சென்ற பொலீஸார் காவல் நிலையத்தில் அடைத்து துன்புறுத்தியதுடன் மல வாசலில் குத்தி காயப்படுத்தியதை தொடர்ந்து இருவருமே மரணமடைந்தனர். இவர்களை அடித்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
அதற்கான ஆதாரங்களும் கிடைத்த நிலையில் அடித்து துன்புறுத்திய பொலீஸார் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொலை குற்றவாளிகளில் ஒருவரான எஸ்ஐ பாலகிருஷ்ணன் சிபிசிஐடி விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
அதன் போது வாக்குமூலம் அளித்த பாலகிருஷ்ணன் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. சாதாரணமாக குற்றவாளிகளை அடிப்பது போல் தான் அடித்தோம், இந்த அளவுக்கு வரும் என்று நினைக்கவில்லை. இப்போ என் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்..!!