” இந்த கட்சியில் உள்ள தலைவர் மற்றும் அமைச்சர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் ” சிந்தியா ரிச்சி அதிரடி..! வெடிக்கும் பூகம்பம்..!!
பாகிஸ்தானில் உள்ள முன்னணி கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) தலைவர் மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது அந்த கட்சியின் தகவல் தொடர்வு அலோசகராக இருந்த சிந்தியா பாலியல் குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ள சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1967ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்ற கட்சியாக இருந்தது.
இந்த கட்சியின் தலைவர்கள் மக்களால் போற்ற பட்டனர். அதன் பின் சிறிது சிறிதாக மதிப்பு குறைந்த நிலையில் இந்த கட்சியில் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப் பட்டார். அதன் பின் இந்த கட்சியின் தலைவராக பெனசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆசிப் அலி சர்தாரி பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டு நீதி கேட்டு வரும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யச் சொல்வார் என்றும் இப்படி ஏராளமான பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பெண்ணான சிந்தியா ரிச்சி 2009 ம் ஆண்டு பாகிஸ்தான் வந்துள்ள நிலையில் அப்போது பிரதமராக இருந்த யூசுப் ரஸா கீலானி மற்றும் அன்றைய அமைச்சர் ரஹ்மான் மாலிக்கும் என்னை பி.பி.பி தகவல் தொடர்பு ஆலோசகராக நியமித்தனர். ஆனால் அப்போது அவர்களின் சுயரூபம் தெரியவில்லை. 2011ம் ஆண்டு ரஹ்மான் மாலிக்கால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டேன்.
அது மட்டும் இன்று யூசுப் கிலானி, அவரது அமைச்சர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். பி.பி.பி கட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் பாலியல் மோகம் கொண்டவர்கள் என சிந்தியா ரிச்சி தெரிவித்துள்ளார். இந்த குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள பி.பி.பி. கட்சியின் தலைவர்கள் சிந்தியா ரிச்சி மீது இஸ்லாமபாத் பொலீஸில் புகார் அளித்துள்ளதுடன் இது குறித்து பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.!