தீபாவளியை முன்னிட்டு சிராங்கூன், டோபி காட் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச மருதாணியிடும் சேவை..!!!
சிங்கப்பூரில் தீபாவளியை முன்னிட்டு சிராங்கூன், டோபி காட் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவச மருதாணியிடும் சேவைக்கு SMRT நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
முதல் வருடமாக இடம்பெற்ற இந்த முயற்சி காலை 10 மணி முதல் நண்பகல் வரை நடைபெற்றது.
பண்டிகைக் காலத்தில் மருதாணியிடுவதைச் சுலபமாக்குவதுடன் பல்லினச் சமூகத்தினரிடையே பண்டிகை உணர்வைக் கொண்டுசெல்ல ஏற்பாடு வகைசெய்வதாக ‘செய்தி’யிடம் தெரிவித்தார் சிராங்கூன் ரயில் நிலையத்தில் இன்று மருதாணியிட்ட கலைஞர் புவனா
பல இனங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் மருதாணியிடத் திரண்டதாக அவர் சொன்னார். மருதாணியின் வடிவங்கள், நிறம், மணம் ஆகியவற்றை அவர்கள் விரும்புவதாகக் கூறினார்.
அடுத்து வரும் வருடங்களிலும் இந்த சேவை தொடரும் என்று புவனா நம்புகின்றார்.