சிங்கப்பூரில் நடமாட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கான மானியம் அறிமுகம்..!!!
சிங்கப்பூரில் சிறந்த துடிப்பான நடமாட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கான மானியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு குளியலறை, உடை மாற்றும் அறை, பொருள் வைக்கும் அறை ஆகியன வசதிகளை செய்து கொடுக்க குறித்த மானியம் உதவுகின்றது.
நடந்தோ, சைக்கிளிலோ அல்லது தனிநபர் நடமாட்டச் சாதனங்களிலோ அலுவலகம் செல்வோருக்குக் கூடுதல் ஆதரவளிப்பது அதன் நோக்கம். குளியலறை, உடை மாற்றும் அறை போன்ற வசதிகளை வழங்குவதற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் நிறுவனங்களுக்கு 80 விழுக்காடு வரை மானியம் வழங்கும்.
பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவதற்காக 80,000 வெள்ளி வரை வழங்கப்படும்.