கிறிஸ்துமஸ் தினத்தன்று காரை மோதிவிட்டு லொரி ஒன்று தப்பியோட்டம்..!!
கிறிஸ்துமஸ் தினத்தன்று காரை மோதி விட்டு, லொரி ஒன்று தப்பியோடிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை நடத்தியுள்ளனர். Asia Ocean Pacific நிறுவனத்தைச் சேர்ந்த அந்த லொரி, முன்னால் இருந்த காரை மோதி விட்டு, வீதியின் சிவப்பு விளக்கை மீறித் தப்பியோடியது. தெம்பனீஸ் அவென்யூ 2க்கும் தெம்பனீஸ் அவென்யூ 7க்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் புதன்கிழமை (டிசம்பர் 25) பிற்பகல் 1.30 மணிவாக்கில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் கேமரா ஒன்றில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், லொரி, வேன் ஒன்றை முந்திக்கொண்டு வீதியை சந்திப்புக்கு விரைகிறது. தக்க நேரத்தில் நிறுத்தத் தவறியதால் காரின் பின்புறத்தை லொரி மோதியுள்ளது. காரின் பின்புறம் விபத்தில் சேதமடைந்துள்ளது. பொறுப்பற்ற முறையில் நடத்து கொண்ட ஊழியரின் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது Asia Ocean Pacific நிறுவனம்.
பொலிசாரிடம் விசாரணையில் ஒத்துழைத்து வருவதாக நிறுவனத்தின் Facebook பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.