எதிர்வரும் வருடத்தில் இருந்து மின் ஸ்கூட்டர் போன்ற சாதனங்களின் எண்ணிக்கை குறைப்பு..!!!
சிங்கப்பூரில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதால் மின் ஸ்கூட்டர் போன்ற சாதனங்களின் எண்ணிக்கை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறையக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய திட்டங்களால் தனிப்பட்ட நடமாட்டச் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று அவற்றை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனினும் நகரப் போக்குவரத்துக்கு அந்த சாதனங்கள் தேவைப்படுவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த நேரத்தில் பயணம் செய்ய உதவும் அவை, குறைவான எரிசக்தியைப் பயன்படுத்துவதை அவர்கள் குறிப்பிட்டனர்.