மது அருந்தி விட்டு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்குத் தொலைபேசி மூலம் அழைத்து அதிகாரியை மிரட்டிய நபருக்கு சிறை..!!
சிங்கப்பூரில் போதைப்பொருள் விற்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவர் மது அருந்தி விட்டு போதை தலைக்கு ஏறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி அதிகாரிகளை மிரட்டிய நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் செய்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் தமது வீட்டின் முகவரியைக் கூறினார் 23 வயதுடைய மார்க்கஸ் கம் யிஜியே என்பவர் அவர் வீட்டில் இருந்த போது அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் உட்கொண்டது, அதனை விற்பனை செய்தது, பொதுச் சேவை ஊழியரை மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 25 நிமிட காலக்கட்டத்தில் 7 முறை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு அழைத்து அதிகாரிகளின் கழுத்தை வெட்டப் போவதாக மிரட்டினார். வீட்டிற்கு வந்து தன்னைக் கைது செய்யுமாறு சவால் விட்டார்.
குறித்த நபரிடம் கஞ்சா வாங்குவது போல் நடித்து அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் நபரின் நன்னடத்தை, தண்டனை விதிக்கப்பட்ட போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.