எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்கள் 3.5 விழுக்காடு அதிகரிப்பு…!!!
சிங்கப்பூரில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளது. அந்த வகையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த 5 வருடங்களில் மின்சாரக் கட்டணம் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
எரிவாயுவின் விலை உயர்வால் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கிறது. கட்டண மாற்றத்தினால் நான்கறை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களின் மாதாந்தர மின்சாரக் கட்டணம் சராசரியாக $2.76 ஏற்றம் காணும் என SP குழுமம் குறிப்பிட்டுள்ளது.
எரிசக்திச் சந்தை ஆணையத்தின் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு காலாண்டிலும் மின்சாரக் கட்டணங்களை SP குழுமம் மறு ஆய்வு செய்யப்பபடுகிறது.