Telegram செயலியின் உரையாடல் குழுக்கள் வழியாக வன்முறையைத் தூண்டிய நபர் கைது..!!
சிங்கப்பூரைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் Telegram செயலியின் உரையாடல் குழுக்கள் வழியாக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர்களை பொங்கோல் பூங்காவில் கூடவும், கண்ணில் காணப்படும் அனைவரையும் காயப்படுத்தவும் பல உரையாடல் குழுக்களில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதைத் ஒட்டி தகவல் அறிந்த பொலிஸார் நபரை அடையாளம் கண்டனர். நேற்று முன்தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். 2 கைபேசிகளையும் பறிமுதல் செய்ததாகக் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.