சிங்கப்பூரில் கைத்தொலைபேசியால் ஏற்பட்ட பரபரப்பு..!!
சிங்கப்பூர் இளைஞர்களுக்கு இடையில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் இருவர் கைத்தொலைபேசி பாவித்தால் கொம்பு முளைக்கும் என்று கூறியுள்ளார் இதை கேட்ட சிங்கப்பூர் இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளனர். மேலும் குவீன்ஸ்லந்து மாநிலத்தின் சன்ஷைன் கோஸ்ட் பல்கலைகழகத்தின் ( University of the Sunshine Coast) சுமார் 200 இளைஞர்களின் கதிர்வீச்சுப் படங்களைச் பரிசோதனை செய்ததில் அவர்களின் மண்டை ஒட்டில் கொம்பு போன்ற முட்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் ஆய்வில் கலந்துகொண்ட 18லிருந்து 30 வயதுக்கு இடைப்பட்ட 41 விழுக்காட்டினருக்கு அவர்களின் கபாலத்தில் சுமார் 3 செண்டிமீட்டர் வரை முட்கள் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் தலையில் கொம்பு முளைப்பதாக நம்பப்படுகிறது ஆய்வின் முடிவுகளைப் பற்றி மேலும் தொடர்ந்து தலை குனிந்து இருக்கும் போது முதுகுத் தண்டுக்கும் மண்டை ஒட்டுக்கும் உள்ள தசைகளில் எலும்பு வளர்ச்சி வேகத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
முதியவர்களிடையே இது போன்ற எலும்பு வளர்ச்சி ஏற்படுவது உண்டு இளம் வயதினரிடையே இது தொடர்பாக”கொம்புகள்” முளைப்பது நம்பத்தக்க ஒரு விசையம் என்கிறார்கள்.ஆனால் கொம்பு முளைப்பது பற்றி கைத்தொலைபேசியினால் தான் ஏற்படுகின்றது எனவும் இதை நிரூபிக்கப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஏனைய ஆய்வாளர்கள் கொம்பு முளைப்பது பற்றி தகவல் தெரியும் வரை முழுமையாக எதையும் உறுதிப்படுத்த முடியாது என்கிறார் சிங்கப்பூர் எலும்பு மருத்துவர் டாக்டர் சின் பாக் லின் கூறியுள்ளார்.