சிங்கப்பூரில் நோயாளியை மானபங்கம் படுத்திய மருத்துவர்..!!
சிங்கப்பூரின் புளோக் 39, ஜாலான் டிகாவில் உள்ள Northeast Medical Group மருந்தகத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் தம்மிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரை மானபங்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செய்துள்ளதாக கூறப்பட்ட வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது
46 வயதுடைய டாக்டர் லூய் வெங் சுன் (Lui Weng Sun), மீது ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 24 வயதுடைய பெண், சளி, காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுக்காக மருத்துவரைச் சென்று பார்த்ததாகவும் அப்போது மருத்துவர், அந்தப் பெண்ணின் மேலாடையை அகற்றி மார்பில் தகாத இடத்தில் தொட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் காதலர் தொலைபேசியில் மூலம் மருத்துவரிடம் விசாரித்த போது அவர் உள்ளுறுப்புகளைச் சோதிக்க வேண்டியிருந்ததாகக் கூறினார். சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுக்கு மேலாடையை அகற்றி உள்ளுறுப்புகளைச் சோதிக்க என்ன அவசியம் வந்தது என்று தாம் கேட்ட கேள்விக்கு மருத்துவரால் தகுந்த பதிலை கொடுக்க முடியவில்லை என்று காதலர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பெண் நோயாளியின் மேலாடையை அகற்றிச் சோதிக்கும் போது பெண் தாதி ஒருவரை அருகில் வைத்திருக்கத் தவறியது ஏன் என்ற கேள்விக்கும் மருத்துவரால் பதிலளிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு குறித்த பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். பின்னர் வழக்கு விசாரணை தொடங்கியது. பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருத்துவருக்கு 2 வருட சிறைத் தண்டனையும் பிரம்படி, அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.