உலக பேட்மிண்டன் சம்மேளன விருதுப்போட்டியில் சிங்கப்பூர்ப்பெண்மணி சாதனை….!!!
சிங்கப்பூர் பெண் ஒருவர் உலக பேட்மின்ட்டன் சம்மேளன விருதுப்போட்டியில் முதலிடத்தை பெற்று ஒற்றையர் காலிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். உலக பேட்மின்ட்டன் விருது போட்டியில் முதல் முதலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பெண்மணி என்ற சிறப்பை இயோ ஜியா மின் (Yeo Jia Min) பெற்றுள்ளார்.
அவர் வியட்னாமின் வு தி டிராங்கை 21-15, 14-21, 21-16 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
பேட்மின்ட்டன் போட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இதற்கு முன்னர் இயோ உலக பேட்மின்டன் வீராங்கனை அகானே யமகுச்சியை (Akane Yamaguchi) வெற்றி பெற்றார். உலகில் 32 ஆம் நிலையில் இருக்கும் இயோ தொடர்ந்தும் தாய்லந்து ஆட்டக்காரரை நேருக்கு நேர் சந்திக்கிறார். உலக விருது பேட்மின்ட்டன் போட்டிகள் சுவிட்ஸர்லந்தின் பேசல் நகரில் நடைபெறுகின்றது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.