சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் F1 இரவு நேரக் கார்ப் பந்தயத்தின் ஆயத்தப் பணிகளைக் கண்காணிக்க வந்த உடும்பு…!!!
சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் F1 இரவு நேரக் கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது. அதற்கு முன் இடம்பெறும் ஏற்பாட்டுப் பணிகளை மேற்ப்பார்வை செய்ய ஓர் உடும்பு வந்துள்ளது. அந்த உடும்பின் செயற்பாட்டை நிலப் போக்குவரவு ஆணையம் Instagram பக்கத்தில் நேற்று காணொளியாகப் இதை பதிவு செய்யப்பட்டது.
பந்தயத்துக்காக நிக்கல் ஹைவே ரயில் நிலையத்தின் அருகிலுள்ள இடத்தைச் சுற்றித் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
காணொளியில் உடும்பு தடுப்புக் கம்பிகளுக்குள் நுழைந்து செல்வதைக் காண முடிகிறது. ஒரு மேற்பார்வையாளர் ஊழியர்களின் வேலையைக் கண்காணிப்பதைப் போலவே உடும்பும் தடுப்புக் கம்பிகளில் அங்குமிங்கும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறது.