சிங்கப்பூரில் இந்த இடங்களில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம்?
சிங்கப்பூரில் புகை பிடிப்பதை தடுக்கும் வகையில் சட்டம் முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு அறிமுகமானது.
புகை பிடிப்பவர்கள் சுவாசித்து விடும் மூச்சில் கலந்திருக்கும் புகையினால் புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படுவர்.
புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளைக் குறைக்க காலப்போக்கில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்த இடங்களில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம்:
1. கட்டடங்கள், பொதுச் சேவை வாகனங்களில் புகைபிடிப்பது குற்றம். புகைபிடிப்பதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி அறைகளிலோ பல மாடி வாகனநிறுத்துமிடத்தின் மேல் மாடியிலோ மட்டுமே புகைபிடிக்கலாம்.
2. மருத்துவமனை வளாகங்கள்
3. கல்வி நிலையங்களிலும் அவற்றின் 5 மீட்டர் சுற்றளவுள்ள பகுதியிலும் புகைபிடிப்பது குற்றம்
4. கூரைவேய்ந்த நடைபாதைகள்
5. பேருந்து நிறுத்தங்களிலும் அவற்றின் 5 மீட்டர் சுற்றளவுள்ள பகுதியிலும் புகைபிடிப்பது குற்றம்.
6. பொதுக் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள பூங்காக்கள்
7. ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் நிர்வாகத்திலுள்ள அனைத்துப் பூங்காங்கள்
8. விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி செய்யும் இடங்கள்
9. நீர்த்தேக்கங்கள்
10. நீச்சல் குளங்கள், அவற்றிலிருக்கும் குளியல் வசதிகள்
11. மேம்பாலங்கள், சுரங்க நடைபாதை
12. கழிப்பறைகள்
13. புகைபிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கட்டங்களின் நுழைவாயில்கள், சன்னல்கள் ஆகியவற்றின் 5 மீட்டர் சுற்றளவுள்ள இடத்தில் புகைபிடிப்பதும் குற்றம்.
14. தேசியப் பூங்காக் கழகத்தின் நிர்வாகத்திலுள்ள சில பூங்காக்களிலும் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேல் கூறிய இடங்களில் புகை பிடித்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.