மலேசியரிடம் கையூட்டு பெற்றதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரியின் மீது குற்றச்சாட்டு..!!!
சிங்கப்பூரில் நிரந்தர வாசத் தகுதிக்கு விண்ணப்பம் செய்த மலேசியரிடம் இருந்து கையூட்டு பெற்றதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
49 வயதுடைய லூசி தியோ, ஸெரன் லூ வாய் வூன் என்ற மற்றொரு பெண்ணுடன் ஒன்றிணைந்து சதி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
தியோ, மலேசியரான ஃபேனி டே ஹுய் நீயிடமிருந்து 1,500 வெள்ளியைப் பெற்றதாகத் கூறப்பட்டது. இலஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும் பொலிஸ் துறையும் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் நடைபெற்றிருந்தன. டேயின் விண்ணப்பத்தைத் அதிகப்படுத்த அந்தத் தொகை கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கையூட்டு தொடர்பான குற்றங்களை ஒருவர் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், 100,000 வெள்ளி அபராதமோ 5 ஆண்டு சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.