சிங்கப்பூரின் காற்றுத்தரத்தில் ஏற்பட்ட மாற்றம்..!!
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் இன்று காலை 5 மணி தொடக்கம் 24 மணி நேரத்துக்கான காற்றுத்தூய்மைக் கேட்டுக் குறியீடு 68-ஆகப் பதிவாகியுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கான குறியீடு, இயல்பு நிலையில் 11க்கும் 20க்கும் இடைப்பட்டுள்ளது. புகை மூட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், கடுமையான வெளிப்புற உடற்பயிற்சியைத் தவிர்க்கும் படி தேசிய சுற்றுப்புற அமைப்பு பொதுமக்களிடம் கூறியுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் 24 மணிநேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான நிலையில் இருந்துள்ளது.
தென்கிழக்குத் திசையில் இருந்து வீசிய பலத்த காற்று அங்கு ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தைக் கலைக்க உதவியதாக அமைப்பு கூறியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை அன்று 238 இடங்களில் காட்டுத் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. அது அண்மையில் 198 இடங்களாக குறைந்துள்ளது.
இந்த தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் மலேசியாவையும் பாதித்துள்ளது. மலேசியாவில் சுமார் 2,500 பள்ளிகள் மூடப்பட்டதால் 1.7 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.