சொந்த மகளை மானபங்கம் செய்த தந்தை..!!!
சிங்கப்பூரில் 12 வயதுடைய சொந்த மகளை 40 வயதுடைய தந்தை மானபங்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.
தந்தை தன்னை மூன்று முறை மானபங்கம் செய்ததாகச் சிறுமி அவரது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் சிறுமியின் தாயார் கணவரைக் கண்டித்து மன்னித்து விட்டார்.
ஒரு வருடத்திற்கு பின்னர் மகளை நான்காவது முறையாக தந்தை மானபங்கம் செய்துள்ளார். இந்த முறை சிறுமியின் பாட்டி இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னர் குறித்த சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறுமியின் தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
விசாரணையின் போது கணவரைக் காப்பாற்ற அவரது மனைவி பொய் சொன்னதாகத் கூறப்பட்டது. மேலும் அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. அவர் அண்மையில் 15,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி குறித்த நபருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.