சிங்கப்பூரில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மாணவி…!!!
சிங்கப்பூரில் துமாசிக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த டினி குரௌதினி என்ற மாணவி தேசிய மாணவர் குடிமைப் படையைச் சேர்ந்தவர். இந்த மாணவி வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
பின்னர் இந்த மாணவி பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து பாதசாரி ஒருவர் மீது மோதிய நிலையில் பாதசாரி சுய நினைவை இழந்தார். ஒரு நொடியும் தயங்காமல் விரைந்து வந்த மாணவி சக பயணியிடம் 995 எண்ணிற்கு அழைக்கும் படி கூறி விட்டு, அடிபட்டு மயங்கி விழுந்த பெண்ணை கவனிக்க சென்றார்.
பேருந்து மோதிய பெண்ணிடம் மூச்சும் நாடியும் இல்லை என்பதை சோதனையில் அறிந்தார். உடனே அவருக்கு CPR எனப்படும் உயிர்காப்பு சிகிச்சையை மேற்கொண்டார். சிலமுறை அந்த சிகிச்சையை வழங்கியதும் மயங்கி விழுந்த பெண் சுய நினைவை பெற்றார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர உதவியாளர்கள் வரும் வரை அந்தப் பாதசாரிக்கு துணையாக குறித்த மனைவி அங்கேயே இருந்தார்.
உயிரைக் காப்பாற்ற வயது ஒரு தடை இல்லை என்பதை அந்த மாணவி செயல் நிரூபித்துள்ளார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.