சிங்கப்பூரின் கல்விக் கட்டமைப்பையும், மாணவர்களையும் பாதுகாப்பதே முதன்மையான குறிக்கோள் – கல்வியமைச்சர் ஓங் யீ காங்
சிங்கப்பூரில் கல்விக் கட்டமைப்பையும், மாணவர்களையும் பாதுகாப்பதே முதன்மையான குறிக்கோள் என்று கல்வியமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் மார்ச் பள்ளி விடுமுறைக் காலத்தில், தென் கிழக்காசியா உட்பட, உலகம் முழுவதும் கடந்த வாரம் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அவர் தம்முடைய Facebook பதிவில் சுட்டியுள்ளார்.வெளிநாட்டிலிருந்த போது கொரோனா வைரஸ் தொற்று ஆளான ஒவ்வொருவரும் மாணவர்களுடன் சேராமல் தள்ளியிருப்பது முக்கியம் என்று திரு.ஓங் தெரிவித்துள்ளார்.
அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், ஒவ்வொருவரும் உடல் வெப்பத்தைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்கள் மருத்துவரை நாடுமாறும் கல்வியைமச்சர் அறிவுறுத்தினார்.