சிங்கப்பூரிலுள்ள ஆங்கிலிக்க தேவாலயத்தின் 27 கிளைகளிலும் பிரார்த்தனைக் கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து..!!
சிங்கப்பூரிலுள்ள ஆங்கிலிக்க தேவாலயத்தின் 27 கிளைகளிலும் பிரார்த்தனைக் கூட்டங்கள் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. கொடிய கொரோனா வைரஸ் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும், தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்குப் பங்களிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தேவாலயத் தலைமையகம் தெரிவித்தது. St Andrew’s Cathedral தேவாலயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இரண்டு வாரத்திற்குப் பிறகு அடுத்த பிரார்த்தனை கூட்டத்தை நடத்த முடிவெடுத்ததாய்த் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வாரு வாரமும் சுமார் 21,000 பேர் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். பிரார்த்தனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படும் வேளையில், பிரார்த்தனைச் சேவைகள் இணையம் வழி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.