சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பும் முக்கிய ஊடகங்களின்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் கொரோனா வைரஸ் சமாளிக்கப் பெரிதும் கைகொடுத்துள்ளன – பிரமர் லீ
சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பும் முக்கிய ஊடகங்களின்மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையும்கொடிய கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்கப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளதாகப் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
The Australian எனும் நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.மக்கள், அரசாங்கம் சொல்வதைக் கேட்டு, அதன் விளக்கங்களைப் புரிந்து கொண்டு, உரிய நேரத்தில்,நடப்பவற்றை வெளிப்படையாகச் சொல்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை மதித்து நடப்பது பேருதவியாக உள்ளது எனப் பிரதமர் லீ கூறியுள்ளார். சமூகத்தின் நம்பிக்கையுடன் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வது அவசியம் என்றபோதும் அதை வலுப்படுத்துவது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார். தகவல்களை மக்கள் சந்தேகிக்கத் தொடங்கினால் விரைவில் அது பெரிய சிக்கலுக்கு இட்டுச்செல்லும் என்று பிரதமர் எச்சரித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கூடுமான வரை கட்டுப்படுத்த மக்களும், நிறுவனங்களும் ஒத்துழைப்பதாக அவர் கூறினார். உடல் வெப்பச்சோதனை போன்ற நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவதைச் சுட்டிய திரு. லீ, நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப வேலை நடைமுறைகளை மாற்றியமைத்ததைக் தெரிவித்தார்.