வெளிநாட்டு ஊழியர்களுக்கான Toh Guan தங்கும் விடுதி தனிமைப்படுத்தும் பகுதியாக அறிவிப்பு…!!!
வெளிநாட்டு ஊழியர்களுக்கான Toh Guan தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்படும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தங்கும் விடுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ், Toh Guan தங்கும் விடுதியை தனிமைப்படுத்தும் இடமாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அது, நேற்றைய தினம் இரவு எட்டரை மணியளவில் நடப்புக்கு வந்தது.
நேற்று நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் Toh Guan விடுதியுடன் தொடர்புடையவர்கள். Sungei Tengah Lodge, Tampines Lodge, Co-crane Lodge Two, 55 Sungei Kadut Loopஇல் உள்ள விடுதி ஆகியவற்றிலும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று, S11 Dormitory @ Punggol, Westlite Toh Guan ஆகிய விடுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. குறித்த இரண்டு விடுதிகளிலும் உள்ள சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 14 நாள்களுக்கு அவர்கள் தங்கள் சொந்த அறைகளில் இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.