ஜனாதிபதி சவால் அறநிதிக்கு இதுவரை சுமார் 10.5 மில்லியன் வெள்ளி திரட்டு..!!!
சிங்கப்பூர் ஜனாதிபதி சவால் அறநிதிக்கு இதுவரைக்கும் சுமார் சுமார் 10.5 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மொத்தமாக 8.3 மில்லியன் வெள்ளி திறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வின் போது திரட்டப்பட்ட நிதி 70 அமைப்புகளுக்கு வழங்கப்படும். அந்த நிதி உடற்குறையுள்ளவர்கள், மன நலப் பிரச்சினை உள்ளவர்கள் போன்றவற்றுக்கு ஆதரவு வழங்கப்படும்.
இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட நிதியில் பெரும் பங்கு ‘Relay Majulah’ எனும் அஞ்சலோட்டம் மூலம் திரட்டப்பட்டது. 200 பங்கேற்பாளர்கள் கூட்டாக 2000 கிலோமீட்டர் தூரத்தை 8 நாட்களில் ஓடி சுமார் 1.6 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளார். அதில் நாடாளுமன்ற நாயகரான டான் சுவான் ஜின்னும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இது சிங்கப்பூரின் ஆக நீண்ட அஞ்சலோட்டம். பொதுமக்கள் ஜனாதிபதி சவால் அறநிதிக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நிதி வழங்கலாம்.