சின்னப்பூரில் பசுமை நிதிச்சூழலை விரைவாக நடைமுறைப்படுத்த புதிய திட்டம்..!!
சிங்கப்பூரில் நிலவி வருகின்ற பருவநிலையில் மாற்றத்தின் விளைவுகளை அதிகரித்து வருவதால் அந்த நாடு அதனை சமாளிக்க தனது பசுமை நிதிச்சூழலை விரைவாக செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு சிங்கப்பூர் நாணய வாரியம் 2 பில்லியன் டொலர் மதிப்புமிக்க திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அந்த திட்டத்தின் இருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கான முதலீட்டைப் பெருக்கமுடியும்.
சுற்றுச்சூழலுக்கு தீமை ஏற்படுத்தாமல் நீடித்த வளர்ச்சியைக் கொண்ட பொருளியலை அமைக்க வேண்டும். அதற்கு இந்த திட்டம் உதவியாக அமையும். பசுமை முதலீட்டுத் திட்டம் என்று அது அழைக்கப்படுகிறது. அது குறித்து கல்வி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு ஓங் யீ காங் நிதித் தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்துள்ளனர். அனைத்துலகப் பசுமை நிதி முயற்சிகளுக்காக100 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் பசுமை நோக்கம் கொண்ட முதலீட்டு உத்திகளுக்கு வாரியம் நிதி ஒதுக்கீடும் என திரு. ஓங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் பசுமை நிதி செயற்பட்டையும், ஆற்றலையும் அதிகரிக்க சொத்து நிர்வாகிகள் உறுதி தெரிவித்திருப்பதாய் அவர் கூறினார்.