சிங்கப்பூரில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1,164 பேர் குணமடைந்தனர்!
நேற்றைய தினம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.அவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தமாக, 5,973 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்தும், சமூகப் பராமரிப்பு வசதிகளில் இருந்தும் வெளியேறியுள்ளனர்.
நேற்றைய’தினம் புதிதாக 752 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து மொத்தம் 26,098 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 750 பேர், தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். எஞ்சிய இருவர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.