சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!
இன்றைய தினம் சிங்கப்பூரில் புதிதாக 570 பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து மொத்தம் 29, 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். 2 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் எனச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.