சிங்கப்பூருக்கும் குக்குப் நகருக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்க தீர்மானித்த மலேசிய உள்துறை அமைச்சர்…!!!
எதிர்வரும் ஜனாதிபதி சனிக்கிழமை தஞ்சோங் பீயாய் தொகுதியில் இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி, 66 வயதுடைய கார்மேனி சார்டினி களமிறக்குகிறது.
தஞ்சோங் பீயாய் (Tanjung Piai) இடைத்தேர்தலில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வெற்றிபெற்றால் சிங்கப்பூருக்கும் ஜொகூரின் குக்குப் நகருக்கும் இடையில் படகுச் சேவையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாஸின் கூறியுள்ளார். ஜொகூர் மாநிலத்தின் தென்மேற்கு முனையில் குக்குப் நகரம் அமைந்துள்ளது. சுற்றுப்பயணிகள் துவாஸில் இருந்து குக்குப் நகருக்குச் செல்ல, படகுச் சேவைகள் வழிவகுக்கும் என்று திரு. முஹைதீன் தெரிவித்துள்ளார்.
அதன் போது குக்குப் வட்டாரத்தில் பயணத்துறை வாய்ப்புகள் அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடல் உணவு வகைகளை ருசிக்க சிங்கப்பூரர்கள் குக்குப் நகருக்கு அதிக எண்ணிக்கையில் பயணிப்பதாக அவர் கூறினார். குக்குப் நகரில் சுற்றுப்பயண மேம்பாட்டுத் திட்டங்கள் அண்மையில் சூடுபிடித்துள்ளது.