சிங்கப்பூரில் யுத்த கால வெடிகுண்டை அப்புறப்படுத்தும் பணிகள் ஆரம்பம்..!!!
சிங்கப்பூரின் ஜியாக் கிம் ஸ்டிரீட்டிலுள்ள கூட்டுரிமை வீடுகளின் குடியிருப்பாளர்கள், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கட்டுமானப் பணிக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நில அகழ்வின் போது ஜியாக் கிம் ஸ்ட்ரீட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அது 2ஆவது உலகப் போர் காலக்கட்டத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.
வெடிகுண்டு 50 கிலோகிராம் எடை கொண்டது என சிங்கப்பூர் ஆயுதப்படையின் வெடிகுண்டுகள் அகற்றும் குழு கூறியுள்ளது. வெடிக்காத நிலையிலுள்ள வெடிகுண்டை வேறு இடத்திற்குக் கொண்டு செல்வது பாதுகாப்பான செயல் அல்ல என்ற குழு, மீட்கப்பட்ட பகுதியிலேயே அதைச் செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து Mirage Tower, Rivergate, Tribeca போன்ற கூட்டுரிமை வீடுகளின் குடியிருப்பாளர்கள் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை வீடுகளை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டனர். குடியிருப்பாளர்கள் அனைவரும் ரிவர் வேலி தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாகத் தங்கவைப்பட்டுள்ளனர்.
எப்போது அவர்கள் வீடு திரும்பலாம்என்று பொலிஸார்கூறியுள்ளார். அதற்கு இடையில் வெடிகுண்டு மீட்கப்பட்ட வட்டாரத்திலுள்ள Grand Copthorne Waterfront ஹோட்டலின் தளங்களில் தங்கியிருப்பவர்களும் வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டனர். அங்கு தங்கியிருப்பவர்களை வீடு திரும்புவற்கு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் ஆற்றின் ஒரு இடத்திலும் ரிவர் வேலி கிரீன், கின் செங், ஜியக் கின் ஸ்டிரீட் போன்றவற்றின் சில இடங்களிலும் வெடிகுண்டை அப்புறப்படுத்துவதற்கான பணிகளுக்காக மூடப்படும்.