சிங்கப்பூரின் ஆக உயரிய Order of Temasek தேசிய விருதைப் பெற்றுள்ளார் திரு. J. Y.பிள்ளை..!!!
சிங்கப்பூர் ஜனாதிபதியின் ஆலோசகர் மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு. J. Y. பிள்ளைக்கு அதி உயரிய Order of Temasek தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் வரை அவர், ஜனாதிபதி ஆலோசகர் மன்றத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து தேசிய தின விருதைப் பெற்றுள்ள சுமார் 5000 பேரில் திரு. J. Y. பிள்ளையும் ஒருவராவர். கலை, சட்டம், அரசாங்கச் சேவை உட்பட பல்வேறு துறைகளில் சமூகத்துக்குப் பங்காற்றிய தலைவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகர் மன்றத்தின் உறுப்பினருமான லிம் சீ ஓன்னுக்கு (Lim Chee Onn) Order of Nila Utama விருது வழங்கப்பட்டது.