ஆரோக்கியமாக இருப்போர் முன் வந்து ரத்த தானம் செய்யும்படி சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவிப்பு..!!
கொடிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அச்சம் நிலவும் வேளையில், பலர் இரத்த தானம் செய்யத் தயங்குகின்றனர். உடல் ஆரோக்கியமாக இருப்போர் தானாகவே முன் வந்து இரத்த தானம்வழங்கும் படி சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
தற்போது இருப்பிலுள்ள இரத்தத்தின் அளவும் மிகவும் குறைவாக இருப்பதால் சுகாதார அறிவியல் ஆணையம் இவ்வாறு கேட்டுக்கொண்டது. நோயாளிகளுக்கு பொதுமக்களின் உதவி தேவை….மக்கள் தயக்கமின்றி இரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டது. சிங்கப்பூரின் இரத்தச் சேமிப்புகளை நிர்வகிக்கிறது ஆணையம். கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்தத்தின் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இல்லை என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியது.