கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரி பற்றிய விவரங்கள்..!!
சிங்கப்பூரில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரியும் ஒருவராகும். அவர் தெங்கா ஆகாயப்படைத் தளத்தில் பணியாற்றி வந்ததாகவும், அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் திகதி பணிக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரி தற்போது தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் சிங்கப்பூர் ஆயுதப்படை கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிகாரி வேலை செய்த இடம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அதிகாரிகளும் தங்களின் சொந்த சுகாதாரத்தில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ஆயுதப்படை கேட்டுக்கொண்டது.